கமல்ஹாசனின் டுவிட்டுகளுக்கு அர்த்தம் என்ன?

  • IndiaGlitz, [Friday,August 11 2017]

கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் கமல்ஹாசன் ஆக்கபூர்வமான கருத்துக்களை தனது டுவிட்டரில் பதிவு செய்து ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முரசொலி பவளவிழாவில் கலந்து கொண்ட பின்னர் தனது டுவிட்டரில் இரண்டு பதிவுகளை தெரிவித்துள்ளார்.

"விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி எனைப் பின் தள்ளாதே. களைத்தெனைத் தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்" .

விம்மாமல் பம்மாமல் விவசாயக் செய். நல்ல விதைகளை விதைத்திடு, உழும்போது பின்பக்கம் பார்க்காதே. பயிர்களின் நடுவே வளரும் செடிகளை களையெடுக்க தாமதிக்காதே. கூடி நடவு செய்தால் வெல்வது நானில்லை நாம். இந்த டுவிட்டுக்கு இதுதான் அர்த்தம் என்று மேலோட்டமாக கூறப்பட்டாலும் இதில் விவசாயத்திற்கு பதிலாக அரசியலை சேர்த்தால் இதன் அர்த்தம் வேறு மாதிரியாக இருக்கும், யாருக்கோ மறைமுகமாக கமல் அரசியல் குறித்து கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது அவர் யாரை மனதில் வைத்து கூறினார் என்பது அந்த ஆண்டவருக்கு மட்டும்தான் தெரியும்.

கமல் தனது அடுத்த டுவிட்டில் 'பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு .தேசியமும் தான்' என்று கூறியுள்ளார். இந்த டுவீட் அனைவருக்கும் புரியும் என்பதால் விளக்கம் தேவை இல்லை என்று நம்பப்படுகிறது.

More News

தற்காப்பு முக்கியம் அல்ல; தன்மானம்தான் முக்கியம்: முரசொலி பவளவிழாவில் கமல்

நேற்று நடைபெற்ற முரசொலி பவள விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்...

நீண்ட இடைவெளிக்கு பின் முரசொலிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்

'முரசொலி' என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கலைஞர் கருணாநிதி தனது தொண்டர்களுக்கு எழுதும் 'உடன்பிறப்பே' என்று ஆரம்பிக்கும் மடல் தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்...

அன்பா வந்தா ஒளி கொடுப்போம், வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்: 'மெர்சல்' பாடல் விமர்சனம்

பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் என்றால் ஒருமுறைக்கு நான்கு முறை கேட்ட பின்னரே ஹிட்டாகும். ஆனால் முதல்முறை கேட்டபொழுதே புல்லரிக்கும் வகையில் ஒரு பாடல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியாகியுள்ளது என்றால் அது சற்று முன் வெளியாகியுள்ள 'ஆளப்போறான் தமிழன்' பாடல் தான்.

முரசொலி பவளவிழாவில் கலந்து கொண்ட கமல்-ரஜினி

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்று வரும் முரசொலி பவளவிழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் வாழ்த்துரை வழங்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது...

பருப்பு பாக்கெட்டில் கருப்பு எலி: ஆன்லைன் பர்ச்சேஸ் ஆபத்தானதா?

தற்போது ஆன்லைனில் அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.