போதை வஸ்துகள் புழங்கும் தேசத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழவே முடியாது: கமல்ஹாசன் ஆவேசம்

  • IndiaGlitz, [Wednesday,March 06 2024]

புதுச்சேரியில் 9 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுமையின் பிணம் சாக்கடைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுச்சேரியை மட்டுமின்றி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இது குறித்து தனது ஆவேசமான கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

எங்கே போகிறோம்?

புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா?

குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது.

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.

More News

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் இன்னொரு தென்னிந்திய படம்.. பிரபல ஹீரோவுக்கு ஜோடி..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் 'தேவாரா' என்ற படத்தில் நாயகியாக நடித்து வரும் நிலையில் தற்போது இன்னொரு தென்னிந்திய நடிகரின் படத்தில்

'குணா' படத்தை சந்தானபாரதி இயக்கவில்லை.. ஒளிப்பதிவாளர் கூறிய அதிர்ச்சி தகவல்..!

மலையாளத் திரைப்படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பின்னர் தான் 'குணா' திரைப்படத்தின் அருமை தற்போது

என் மனைவி இன்று உயிருடன் இருப்பதற்கு காரணம் ரஜினி சார் தான்.. நா தழுதழுக்க சொன்ன பிரபல நடிகர்..!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் தனது மனைவி இன்று உயிரோடு இருப்பதற்கு காரணம் ரஜினி சார் தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நா தழுதழுக்க கூறி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'என்ஜாய் என்சாமி' பாடல் பிரச்சனையில் ஏ.ஆர்.ரஹ்மான்? சந்தோஷ் நாராயணன் விளக்கம்..!

'என்ஜாய் என்சாமி' பாடல் மூலம் தனக்கு ஒரு ரூபாய் கூட வருமானம் வரவில்லை என்று நேற்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் இந்த வீடியோவின் கமெண்ட்களில் ஏஆர் ரகுமான்

'கோட்' நாயகிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தயாரிப்பாளர்.. எதிர்பாராத அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடித்து 'கோட்' கோட் படத்தின் நாயகி மீனாட்சி சவுத்ரிக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில்