4 தொகுதி இடைத்தேர்தல்: கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்ட கமல் கட்சி வேட்பாளர்கள்

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கடந்த 22ஆம் தேதி இந்த நான்கு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையவுள்ளது.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் முடிவடையும் கடைசி நேரத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இதோ

திருப்பரங்குன்றம் - சக்திவேல்

சூலூர் - ஜி.மயில்சாமி

அரவக்குறிச்சி - எஸ்.மோகன்ராஜ்

ஒட்டப்பிடாரம் - எம்.காந்தி

ஏற்கனவே இந்த நான்கு தொகுதிகளுக்கும் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி ஆகியவை வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நான்கு தொகுதிகளிலும் நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளும், இந்த நான்கு தொகுதி முடிவுகளும் வரும் மே 23ஆம் தேதி அறிவிக்கப்படும்

More News

'செம டைட்டில்': விஜய் வாழ்த்தால் மெர்சலான நடிகர்

தளபதி விஜய்கு சினிமா துறையில் உள்ளவர்கள் பலர் தீவிர ரசிகர்கள் என்பதும் அவர்களில் ஒருவர் கே.பாக்யராஜின் மகனும் நடிகருமான சாந்தனு என்பதும் தெரிந்ததே.

போலீஸ் கஸ்டடியில் பிரபல இயக்குனர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராம்கோபால் வர்மா போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

4 ஆண்டுகளாக கல்லூரி மாணவியை சீரழித்த திருமணமான காமுகன் கைது!

ஈரோடு அருகே கல்லூரி மாணவி ஒருவரை கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த திருமணமான காமுகன் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் திமுக எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்!

முன்னாள் திமுக எம்பியும், பத்திரிகையாளரும், எழுத்தாளருமான வசந்தி ஸ்டான்லி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 56

அவெஞ்சர்ஸ் படம் பார்த்ததால் உயிருக்கு போராடிய இளம்பெண்

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் படமான 'அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம்' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் சாதனை செய்து வருகிறது.