சுப்ரீம் கோர்ட் போனாலும் விடமாட்டேன்: கமல்ஹாசன்

தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் சென்னை தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் இரண்டே நாட்களில் சுமார் 300 கோடி டாஸ்மாக் சரக்குகள் விற்பனை ஆகின என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றும் மேலும் உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்டதாகவும் கூறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்பட ஒருசில அமைப்புகள் பதிவு செய்த இந்த வழக்குகளின் அடிப்படையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டது

இந்த நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும் டாஸ்மாக் மூடப்பட்டதால் அரசின் வருமானம் பெருமளவு குறைந்துள்ளதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தனது மேல்முறையீடு மனுவில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீடு குறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்.

More News

தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்றும் கொரோனாவுக்கு 500க்கும் மேற்பட்டவரகள் பாதிப்படைந்ததாக

கொரோனா வைரஸால் பாதித்த ரசிகர்: சிம்பு செய்த நெகிழ்ச்சியான செயல்!

நடிகர் சிம்பு தனது ரசிகர்கள் மீது மிகுந்த பற்றும் பாசமும் உள்ளவர் என்றும் அவ்வப்போது ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை என்று பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார் என்பதும் தெரிந்ததே

கொரோனா பயங்கரம்: கண்டுபிடிக்கப்படாத சமூகப் பரவல் அதிகரிக்கும்!!! WHO எச்சரிக்கை!!!

கொரோனா பாதிப்பு மேற்கத்திய நாடுகளில் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் தற்போது ஆப்பிரிக்கா நாடுகளையும் தாக்க ஆரம்பிவித்து விட்டது.

இதுகூட புரியாமல் வசைபாடுகிறீர்களே? விஜய்சேதுபதி விவகாரம் குறித்து பிரபல இயக்குனர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது கடவுள் குளிப்பதை காட்டுகிறார்கள்,

அமித்ஷா உடல்நிலைக்கு என்ன ஆச்சு? அவரே அளித்த விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அவர் குறித்த செய்திகள் எதுவும் ஊடகங்களில் வெளிவரவில்லை.