நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும்: கமல்ஹாசன் டுவிட்

  • IndiaGlitz, [Thursday,July 15 2021]

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்று உள்ளார்கள் என்பதும் அவர்களில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் வீரர்கள் பதக்கம் வென்றால் பரிசு வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் உலகநாயகன் கமலஹாசன் கலந்துரையாடினார். அவர் கலந்துரையாடிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறிய கமல்ஹாசன் பதக்கம் வென்று வாருங்கள் என்று வாழ்த்து கூறியுள்ளார். இதனை அடுத்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் இது குறித்து பதிவு செய்திருப்பதாவது:

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ் வீரமே வாகையே சூடும். நாளை உலகமே இவர்கள் புகழ் பாடும்.