டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்: பிக்பாஸ் செட்டுக்கு செல்கிறாரா?

  • IndiaGlitz, [Saturday,December 04 2021]

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் அவரது உடல் நிலை படிப்படியாக சீரானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறி காரில் செல்லும் காட்சிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பக்கத்தில் ’கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தலைவர் தனது அன்றாட கடமைகளை சிறப்பாக ஆற்ற தயாராக உள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் இந்த பிரபல நடிகையா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ,லைக்கா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் 'இந்தியன் 2'.

சின்னத்திரையுலகின் அடுத்த ஜோடி: இன்ஸ்டாவில் அறிவிக்கப்பட்ட க்யூட் காதல்!

தமிழ் திரையுலகில் அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, பிரசன்னா - சினேகா உட்பட பல நட்சத்திரங்கள் நிஜ வாழ்விலும் ஜோடிகள் ஆளாகியுள்ளனர் என்பது தெரிந்ததே.

அஜித்தின் சம்பளம் இத்தனை கோடியா?

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

திரையுலகில் விஜய்யின் 29 வருடங்கள்: காமன் டிபி போஸ்டர் வைரல்!

தமிழ் திரையுலகில் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிய 29 வருடங்கள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் காமன் டிபி போஸ்டரை வெளியீடு கொண்டாடி வருகின்றனர் 

காதலரிடம் ஏமாந்தாரா? போலீஸில் புகார் அளித்த பிக்பாஸ் ஜூலி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி தன்னுடைய காதலர் தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.