பெப்சி தொழிலாளர்களுக்கு கமல்ஹாசன் கொடுத்த தொகை!

கொரோனா வைரஸ் பீதி காரணமாக வேலை இன்றி, வருமானமின்றி ,வீட்டில் குடும்பத்துடன் பசியும் பட்டினியுமாக இருக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு, சினிமா நடிகர் நடிகைகள் உள்பட திரை துறையினர் உதவி செய்ய வேண்டும் என ஆர்கே செல்வமணி சமீபத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்

இந்த கோரிக்கையை ஏற்று ரஜினிகாந்த் 50 லட்சம், சூர்யா 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஜய் சேதுபதி 10 லட்சம், மற்றும் நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகள் என உதவிகள் குவிந்தன.

இந்த நிலையில் தற்போது மேலும் சில உதவிகள் பெப்சி தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ளது. அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் 10 லட்சம், தனுஷ் 15 லட்சம், இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் என ஆகியோர் உதவிகள் கிடைத்து உள்ளது. மேலும் சில மாஸ் நடிகர்களிடம் இருந்து விரைவில் பெரிய அளவிலான உதவித்தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது