close
Choose your channels

மீண்டும் களத்தில் இறங்கும் கமல்ஹாசன்: வெற்றி நமதே என சூளுரை!

Thursday, September 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதனை அடுத்து அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதும், குறிப்பாக அதிமுக திமுக கட்சிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளது. இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களிலும் பரப்புரை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே! என குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் கட்சி ஏற்கனவே சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலை சந்தித்த நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.