பிரிட்டிஷ் மகாராணி முன் பேசிய வசனம்: சுதந்திர தின வாழ்த்து செய்தியில் கூறிய கமல்!

  • IndiaGlitz, [Sunday,August 14 2022]

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை நாடு முழுவதும் பொது மக்கள் கொண்டாடி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் பிரிட்டிஷ் ராணியின் முன் சுதந்திரம் குறித்து பேசிய வசனத்தை பதிவு செய்து சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஒவ்வொரு இந்தியருக்கும் என் மனப்பூர்வமான சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். 25 ஆண்டுகளுக்கு முன்னர் மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில், பிரிட்டிஷ் மகாராணி முன்னிலையில் படமாக்கப்பட்ட காட்சியில், “ஒரு கடலையோ காற்றையோ, காட்டையோ குத்தகைக்கோ, வாடகைக்கோ, சொந்தம் கொண்டாடவோ முடியும் எனும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது? இந்த மரத்தின் வயது இருக்குமா உங்களுக்கு? யார் நீங்கள்? இது என் நாடு. என் தகப்பனின் சாம்பலின் மீது நான் நடக்கிறேன். நாளை என் சாம்பலின் மீது என் மகன் நடப்பான்” எனும் வசனத்தைப் பேசினேன்.

இது சினிமாவிற்காக எழுதிய வசனம் அல்ல. என் உள்ளத்தில் இருந்த தீ. அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தாய் நிலத்தை மீட்க களம் இறங்கிய ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருந்த தீ. என் உளத்தீ இன்னமும் அணையவில்லை. உங்களிடமும் இருக்கும் இந்தத் தீ நீடிக்கும் வரை, நம் வீடும் நாடும் மாநிலமும் ஊரும் தெருவும் சீராகும்

தியாக மறவர்கள் பலர் தங்கள் இன்னுயிரை, சொந்த வாழ்க்கையை, சொத்து சுகங்களை இழந்து பன்னெடுங்காலம் போராடி பெற்றது இந்தச் சுதந்திரம் என்பது நம் வரலாறு. வரலாற்றை மறந்து விட்டால், மீண்டும் அதே நாட்களுக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்பதும் வரலாறு. மறவோம் மறவோம் என்று இந்த நாளில் உறுதி கொள்வோம்.

தாயகம் காக்க தன்னலம் துறந்த அன்றைய சுதந்திரப் போராட்ட வீரர்களையும், இன்றைய நாளை நாம் இனிதே கொண்டாட எல்லைகளைக் காக்கும் முப்படை வீரர்களையும் நன்றியோடு நினைவுகூர்வோம். இவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம். வீரமும் தியாகமும் யாவர்க்கும் உரியவை. வளர்த்துக்கொள்வோம்''

இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More News

30 ஆண்டுகள் செய்தி வாசித்த பிரபலம் காலமானார்: பொதுமக்கள் இரங்கல்

அகில இந்திய வானொலியில் 30 ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக இருந்த சரோஜ் நாராயணசுவாமி காலமானார். அவருக்கு வயது 87.

'என்ன கொடுமை இது': நயன்தாரா கெட்டப் போட்ட பிக்பாஸ் நடிகை குறித்து விக்னேஷ் சிவன் கமெண்ட்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கெட்டப்பில் இருக்கும் பிக்பாஸ் நடிகையின் புகைப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் கொடுத்த கமெண்ட்ஸ் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'என்னை ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க: விஜய் டிவி பிரபலத்தின் வீடியோ வைரல்!

 என்னை ரொம்ப கொடுமை கொடுமைப்படுத்துறாங்க என விஜய் டிவி பிரபலம் ஒருவர் கூறும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பார்சிலோனா பறக்கும் முன் நயன்தாரா முடித்து கொடுத்த திரைப்படம் இதுதான்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பார்சிலோனா நாட்டிற்கு சென்றார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

எனக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் ஏற்பட கூடாது: மீனா எடுத்த அதிரடி முடிவு!

நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக