ரிலீசுக்கு முன்பே ரூ.200 கோடி வியாபாரம் ஆன 'தக்லைஃப்'.. ஆச்சரியத்தில் கோலிவுட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்த ‘தக்லைஃப்’ படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் நாயகன் படத்திற்கு பின் இருவரும் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் சேரும் முக்கியமான கூட்டணி என்பதால் ரசிகர்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
படம் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிந்து, இறுதி கட்டத்தில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, படத்தின் ப்ரோமோஷன் மற்றும் வணிக நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், ‘தக்லைஃப்’ படம் ரிலீஸுக்கு முன்பே ரூ.200 கோடிக்கு மேல் வியாபாரம் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இப்படத்தின் ஓடிடி உரிமையை ஒரு முன்னணி நிறுவனம் ரூ.150 கோடிக்கு பெற்றுள்ளதுடன், சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி ரூ.60 கோடிக்கு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பான் இந்தியா திரைப்படமாக ‘தக்லைஃப்’ உருவாகி உள்ளதால், இந்தியா முழுவதும் இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உலகம் முழுவதும் இப்படத்திற்கு உருவாகியிருக்கும் எதிர்பார்ப்பு காரணமாக, கமல்ஹாசனின் முந்தைய வெற்றி திரைப்படமான ‘விக்ரம்’ படத்தின் வசூலை கூட எளிதில் தாண்டும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, நாசர், அலி ஃபைசல், பங்கஜ் திரிபாதி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments