கமல்ஹாசனின் அடுத்த படத்தின் கதை: 'விக்ரம்' ஆடியோ விழாவில் பா ரஞ்சித்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தின் ஆடியோ விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பா ரஞ்சித் கமல்ஹாசனின் அடுத்த படத்தின் கதை என்ன என்பதை கூறியுள்ளார்

கமல் ஹாசன் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று ‘விக்ரம்’ படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட பா ரஞ்சித், ‘கமல்ஹாசனின் ’விருமாண்டி’ படம் தனக்கு ரொம்ப பிடித்த படம் என்றும் மிக விரைவில் மதுரை பின்னணியில் உலகநாயகன் கமல் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன் என்றும் பா ரஞ்சித் கூறியுள்ளார்

கமல்ஹாசனுடன் இணைந்து மதுரை களத்தில் ஒரு படம் பண்ணவேண்டும் என்று தனக்கு தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்றும் அது விரைவில் நிறைவேறும் என்றும் மிக விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். மதுரை களத்தில் கமல்ஹாசன் - பா ரஞ்சித் இணையும் படம் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News

யாரு விடியலை பாக்க போறாங்கன்னு முடிவு பண்றது நான்: 'விக்ரம்' டிரைலர்

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய 'விக்ரம்' படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'விக்ரம்' படத்தில் நானும் இருக்கின்றேன்: 1986 'விக்ரம்' படத்தின் லிசி பேட்டி!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற உள்ளது

திருமணத்திற்கு பின்னரும் கள்ளத்தொடர்பு வைத்திருந்தேன்: பிரபல நடிகை பேட்டி

திருமணத்திற்கு பின்னர் இன்னொருவருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தேன் என்றும் எனது கணவரும் இன்னொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்

எத்தனை கோடி செலவு செய்தாலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடியாது: கே.எஸ்.ரவிகுமார்

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எத்தனை கோடி கொடுத்தாலும் எடுக்க முடியாது என அவர் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தாய்லாந்தில் தமிழ் ஹீரோவின் படப்பிடிப்பு: கல்லெறிந்து படக்குழுவினரகளை விரட்டிய பொதுமக்கள்!

தமிழ் ஹீரோவின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அங்குள்ள பொதுமக்கள் படக்குழுவினரை கல்லால் எறிந்து விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .