close
Choose your channels

ரஜினியை அடுத்து கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை: பரபரப்பு தகவல்

Monday, November 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியல் கட்சி குறித்த தெளிவான ஒரு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் ’விரைவில் அரசியல் குறித்த நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறினார். இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் அவர் விரைவில் அரசியல் குறித்த முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நிலையில், நாளை உலக நாயகன் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றும் வருகை தரும் பத்திரிகையாளர்கள் அனைவரும் கோவிட் விதிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது

நாளைய செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய நிலையில், நாளை கமலஹாசனும் செய்தியாளர்களை சந்திக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.