மக்களை எதிர்கொள்ள அஞ்சுகிறார்களா? தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி!

  • IndiaGlitz, [Saturday,January 23 2021]

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஆண்டு தேர்தலில் அதிமுக, திமுக மட்டுமின்றி கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கமலஹாசன் ஏற்கனவே சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டார் என்பதும் தற்போது அவர் சர்ஜரி செய்து ஓய்வு எடுத்துக் வருகிறார் என்பதும் விரைவில் அவர் அடுத்த கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தாலும் சமூக வலைதளங்கள் மூலம் அவரது பிரச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக அரசுக்கும் மற்ற அரசியல் கட்சிக்கும் அவர் பல கேள்விகளை எழுப்பி வருகிறார் என்பதும் அந்த கேள்விகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தற்போது கிராமசபை கூட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு கேள்வி ஒன்றை கமல்ஹாசன் எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது: கிராம சபை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கூட்டம் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்திருப்பது, மக்களை எதிர்கொள்ள அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும் #நான்_கேட்பேன்

More News

தென்னிந்திய நடிகைகளில் சமந்தாவுக்கு கிடைத்த முதல் பெருமை!

மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அந்த படங்களின் குழுவினர்கள் வித்தியாசமாக புரமோஷன் செய்து வருவதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

அதிபர் ஜோ பிடன் உரைக்குப் பின்னால் ஜொலித்த இந்தியர்? யார் இந்த வினய் ரெட்டி?

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜோ பிடன், பதவி ஏற்றுக்கொண்ட உடன் தனது உரையை நாட்டு மக்களுக்கு நிகழ்த்தினார்.

'இயேசு அழைக்கிறார்' அமைப்பில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத முதலீடுகள் இத்தனை கோடியா?

கடந்த மூன்று நாட்களாக 'இயேசு அழைக்கிறார்' என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் என்பது தெரிந்ததே.

'வலிமை' அப்டேட்டை யாரிடம் அஜித் ரசிகர்கள் கேட்டார்கள் தெரியுமா? கொஞ்சம் ஓவராத்தான் போறாங்களோ!

தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

காதலுக்கு வயதில்லை: 52 வயது அஜித் பட வில்லனை காதலிக்கும் 'தனி ஒருவன்' பட நடிகை!

காதல் வயது வித்தியாசம் பார்த்து வருவதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 52 வயது அஜித் பட வில்லன் நடிகர் ஒருவரை நடிகை ஒருவர் காதலிக்கும் தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது