போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதை அடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட உலக நாயகன் நடிகர் கமலஹாசன் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸுக்கு எதிரான விழிப்புணர்வு செய்திகள் மற்றும் கவிதைகள், தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆறுதல்கள் ஆகியவற்றை தெரிவித்து வருகிறார்

அதுமட்டுமின்றி மத்திய மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளுடன் கூடிய விமர்சனத்தையும் அவர் கூறி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக தங்கள் உயிரையே பணயம் வைத்துப் போராடி வரும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதாக வெளிவந்த செய்தியை அடுத்து கமல்ஹாசன் இது குறித்து சற்று முன்னர் ஒரு கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்

கமல்ஹாசனின் இந்த டுவீட்டுக்கு நெட்டிசன்களிடையே பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது

More News

பிரபல நகைச்சுவை நடிகர் கொரோனாவிற்கு பலி: ரசிகர்கள் அதிர்ச்சி

ஏழை முதல் பணக்காரர் வரை, பாமரர் முதல் பெரிய பதவியில் இருப்பவர் வரை பாகுபாடின்றி கொரோனா வைரஸ் தாக்கி வரும் நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவரும் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளது

சமூக விலகல் (Social Distancing) ஏன் அவசியமாகிறது??? விலகலில் பல வகைகள்!!!

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது

கொரோனா 3 ஆம் கட்டம் என்றால் என்ன??? இந்தியாவின் நிலைமை???

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தை எட்டியிருக்கிறது.

சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை

உலகம் முழுவதும் பரவி ஏராளமான மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் தாக்கி உள்ளது.

பொருளாதாரத்தைச் சீர்செய்யவே முடியாது!!! மனமுடைந்த ஜெர்மன் நிதியமைச்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை!!!

கொரோனா பாதிப்பினால் உலகம் கடும் பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில்