பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறினேன்: கமல்ஹாசன்

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரிவு ஏற்படும் என நான் ஏற்கனவே கூறியது போலவே தற்போது நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது என பேட்டி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையால் அதிருப்தி அடைந்த திமுக, காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து விலக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என டிஆர் பாலு அவர்களும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதால் கூட்டணிக்கு எந்தவித நஷ்டமும் இல்லை என துரைமுருகன் அவர்களும் பேட்டி அளித்தது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலக்கப்பட்டு விட்டது என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் பிரிவு குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் அவர்கள் ’பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறியது போலவே தற்போது நிகழ்வுகள் நடக்கிறது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியுடன் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்தார் என்பது தெரிந்ததே. இதனால் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமையும் என்றும் அதில் மக்கள் நீதி மையம் கட்சியும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

எளிய மக்களின் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் – ஒரு வரலாற்று சரித்திரம்

தமிழக அரசியல் சந்தித்த பெரும் புயல், ஒரு வரலாற்று நாயகன், இந்தியாவே நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு சினிமா துறையிலும் அரசியல் துறையிலும் மைல் கல்லாக விளங்கியவர் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள்.

ரஜினிகாந்த் மீது காவல்துறை ஆணையரிடம் புகார்: பெரும் பரபரப்பு

பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசியதாக அவர் மீது கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2021ல் நாங்க தான் இருக்கணும்: விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த போஸ்டரை வைத்து விஜய் ரசிகர்கள் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருப்பது

இது எம்ஜிஆரா? அரவிந்த்சாமியா? ரசிகர்கள் ஆச்சரியம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

அடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு: பொங்கல் தினத்தில் வெட்டி கொல்லப்பட்ட வாலிபர்

அடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 26 வயது வாலிபர் ஒருவர் பொங்கல் தினத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரமேரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது