close
Choose your channels

கெஜ்ரிவால் பேசியிருந்தாலும் தவறு தவறுதான்: கமல்ஹாசன்

Tuesday, May 7, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட யார் பேசியிருந்தாலும் தவறு தவறுதான் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹசன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் அதிக இடங்களை ஆக்கிரமித்து கொள்வதாகவும், அதனை தடுத்து டெல்லி மாணவர்கள் அதிகம் இடம்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். டெல்லி முதல்வரின் இந்த கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகிய கமல்ஹாசன் இதுகுறித்து என்ன கருத்து தெரிவிக்கவுள்ளார்? என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் இருந்தனர். இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'தனி மாநில கோரிக்கையின் வெளிப்பாடாகவே தமிழ் மாணவர்கள் குறித்து கெஜ்ரிவால் பேசியதாக கருதுகிறேன் என்றும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட யார் பேசியிருந்தாலும் தவறு தவறுதான் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த தினத்தன்று நேரில் வாழ்த்தியவரும், கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தபோதிலும் அவருடைய கருத்து தவறுதான் என்று நேர்மையாக பதிலளித்த கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.