பேனர் வழக்கில்  நீதி தாமதமாக கிடைத்துள்ளது: கமல்ஹாசன் 

  • IndiaGlitz, [Friday,September 27 2019]

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள பேனர் விழுந்ததால் தடுமாறி கீழே விழுந்தார். இதனையடுத்து பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பேனர் அச்சடித்த அச்சகத்தை சீல் வைத்தது. லாரி டிரைவரையும் கைது செய்தது. ஆனால் பேனர் வைக்க காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி அதிமுக பிரமுகர் ஜெயகோபால் என்பவரை மட்டும் கைது செய்யாமல் இருந்தது

இதற்கு அரசியல் கட்சிகளும் நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இதனையடுத்து இன்று அவர் கைது செய்யப்பட்டார்

இந்த நிலையில் பேனர் வழக்கில் ஜெயகோபால் கைது செய்யப்பட்டுள்ளது நிம்மதி அளிப்பதாகவும் ஆனாலும் நீதி தாமதமாக கிடைத்துள்ளதாகவும் உலக நாயகனும் மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

அதேபோல் பேனர் வழக்கில் ஜெயகோபால் கைது செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிப்பதாகவும், இந்த வழக்கில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து நீதி பெற்று தருவார்கள் என நம்புவதாகவும் சுபஸ்ரீ பெற்றோர் பேட்டி அளித்துள்ளனர்.

More News

'ஒத்த செருப்பு' பார்த்ததும் பார்த்திபனிடம் உளறினேன்: எஸ்.ஏ.சந்திரசேகர்

பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்து 'ஒத்த செருப்பு திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சென்னையில் நடந்த நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட எஸ்ஏ சந்திரசேகர்

அக்டோபர் 11ல் ரிலீஸ் ஆகும் 5 படங்களில் 2 த்ரில் படங்கள்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக திகில் படங்கள் அதிகம் தயாராகிவரும் நிலையில் வரும் அக்டோபர் 11-ம் தேதி ரிலீஸாகும் 5 படங்களில் மூன்று படங்கள் திகில் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

ரூ.10 கோடி விவகாரம்: ஞானவேல்ராஜாவுக்கு கமல்ஹாசன் பதில்!

'உத்தம வில்லன்' திரைப்படம் வெளியாகும்போது ஏற்பட்ட பொருளாதார சிக்கலை சரிசெய்ய கமல்ஹாசன் தன்னிடம் ரூ.10 கோடி பெற்றதாகவும், அதற்காக தனது நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடித்து தருவதாக கமல்

சென்னை திரும்பினார் சிம்பு! அடுத்த அதிரடி எப்போது?

கடந்த சில வாரங்களாக தாய்லாந்து நாட்டில் படப்பிடிப்பு மற்றும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்த சிம்பு, சென்னை திரும்பியதும் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளை சந்திக்கவிருப்பதாகவும்,

காமசூத்ராவின் அடுத்த பாகத்தில் சன்னிலியோன்? 

கடந்த 1996ஆம் ஆண்டு மீரா நாயர் இயக்கத்தில் ரேகா நடித்த 'காமசூத்ரா' என்ற திரைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படம் கோல்டன் சீஷெல் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டதோடு,