close
Choose your channels

டெல்லி ஜெனரேட்டாலும் தமிழக அரசை சரி செய்ய முடியாது: கமல்ஹாசன்

Friday, May 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டிருந்தபோது ஜெனரேட்டரும் பழுதானதால் ஐந்து நோயாளிகள் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது பாணியில் பதிலளித்தார்.

டெல்லியில் இருந்து ஜெனரேட்டர் வைத்து இயக்கினாலும் பழுதுபட்டுள்ள தமிழக அரசை சரிசெய்ய முடியாது என்றும், எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் இன்றைய தமிழக அரசின் நிலையாக உள்ளது என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் கூறிய கமல்ஹாசன், 'தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், வாக்கு இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் அறையை எக்காரணம் கொண்டும் திறக்க கூடாது' என்றும் கூறினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.