நான் ராமரின் அப்பா வகையறா.. இன்னும் பல திருமணங்கள் பாக்கி இருக்குது: கமல்ஹாசன்


Send us your feedback to audioarticles@vaarta.com


ப்ராப்பர் குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் எப்படி இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று தன்னிடம் ஒருவர் கேட்டதாகவும், அதற்கு பதிலாக “நான் ராமர் அல்ல, ராமனின் அப்பா வகையறா” என்று கூறியதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ’தக்லைஃப்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, த்ரிஷா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் த்ரிஷா பேச வந்தபோது, அவரிடம் திருமணம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன த்ரிஷா, “எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. அது நடந்தாலும் பரவாயில்லை, நடக்காவிட்டாலும் பரவாயில்லை” என்று பதிலளித்தார்.
அதன் பிறகு கமல்ஹாசன் பேசியபோது, “வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி என்று சொல்கிறார்கள். இவங்க ஓட்டு போடுவாங்களா, போட மாட்டாங்களா என்று தெரியவில்லை. ஓட்டு போடுபவர்கள் யாரும் அப்படி நினைக்க வேண்டாம்” என்று தெரிவித்தார்.
மேலும், “என்னிடம் எம்பி பிரிட்டாஸ் என்பவர், ‘நீங்கள் பிரபல குடும்பத்தைச் சேர்ந்தவர், ராமனை வணங்கும் நீங்கள் எப்படி இரண்டு கல்யாணம் செய்யலாம்?’ என்று கேட்டார். அதற்கு நான், ‘நான் ராமர் இல்லை, ராமரின் அப்பா வகையறா. இன்னும் 49 ஆயிரத்து சொச்சம் திருமணம் பாக்கி இருக்குது’ என்று கூறினேன்,” என்றும் தெரிவித்தார்.
மேலும், “நான் கடவுளை வணங்குவதில்லை என்பது வேறு விஷயம். ப்ராப்பர் குடும்பத்திலிருந்து வருவதற்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு புரியவில்லை” என்றும் அவர் கூறினார். கமல்ஹாசனின் இந்த நகைச்சுவையான பேச்சு, ஆடியன்ஸ் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com