close
Choose your channels

உண்மை கதை என்று கூறினால் மட்டும் போதாது, உண்மையும் இருக்க வேண்டும்: கமல்ஹாசன்

Saturday, May 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உண்மை கதை என்று கூறினால் மட்டும் போதாது கதையில் உண்மையும் இருக்க வேண்டும் என உலகநாயகன் கமல்ஹாசன் ’தி கேரளா ஸ்டோரி’ என்ற படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு கேரள முதலமைச்சர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளும் இந்த படத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் அதே நேரத்தில் இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் செய்தது என்பதும் மக்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ’தி கேரளா ஸ்டோரி’ படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல, பிரச்சார படங்களுக்கு நான் எதிரானவன் என ஏற்கனவே கூறிவிட்டேன், உண்மை கதை என படத்தில் கூறினால் மட்டும் போதாது, அது உண்மையாக இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.