ஐ லவ் யூ என்று யாரும் சொல்லவில்லை.. மணிரத்னத்திற்கு பட்டப்பெயர்: கமல் பேச்சின் சுவாரஸ்யம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


‘தக்லைஃப்’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸ் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், "மணிரத்னத்திற்கு ஒரு பட்டப்பெயர் வைத்துள்ளேன்," என்றும், "என்னை பார்த்து இரண்டு கதாநாயகிகளும் 'ஐ லவ் யூ' சொல்லவில்லை," என்ற வருத்தத்தை நகைச்சுவையாக வெளியிட்டார்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘தக்லைஃப்’ திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான 'சிங்குச்சா' வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய கமல்ஹாசன் "மணிரத்னத்திற்கு நான் 'அஞ்சரை மணிரத்னம்' என்ற பட்டப்பெயர் வைத்திருந்தேன். காரணம், படப்பிடிப்புக்கு காலை 5 மணிக்கே வந்து, ஐந்தரை மணிக்கு எல்லாம் படப்பிடிப்பை தொடங்கி விடுவார்," என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து, டி. ராஜேந்தர் பற்றி பேசினார். "டி.ஆர் என்மேல் மிகுந்த அன்பும் பாசமும் வைத்திருப்பார். எனக்கு ஏதாவது என்றால் அழுதே விடுவார். ஆனால் அதைவிட, சிம்பு என் மேல் இரண்டு மடங்கு பாசம் வைத்துள்ளார். டி.ஆர் எட்டடி என்றால், சிம்பு 16 அடி பாய்ந்து உள்ளார். இப்படியே ஒரு டயலாக்கும் படத்தில் இருக்கிறது, போட்டியும் பொறாமையும் நிறைந்த திரையுலகில், இப்படிப்பட்ட நட்பு எனக்கு கிடைத்திருப்பது மிகவும் ஆச்சரியம்," என தெரிவித்தார்.
மேலும், "மேடையில் இருக்கிற இரண்டு கதாநாயகிகளும் படத்தில் என்னைப் பார்த்து ஒரு தடவைக்கூட 'ஐ லவ் யூ' சொல்லவில்லை. ஆனால், தினந்தோறும் ஷூட்டிங் வரும்போது, 'சார் ஐ லவ் யூ' என்று சொல்லும் ஒரே ஆள் ஜோ ஜோதான். அதனால் மனதை தேற்றி கொள்கிறேன்," என்று நகைச்சுவையாக கமல்ஹாசன் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com