close
Choose your channels

சுபஸ்ரீ மரணம்: விஜய் பேச்சு குறித்து கமல்ஹாசன் கருத்து

Friday, September 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசியபோது சமீபத்தில் பேனர் கலாச்சாரத்தால் மரணம் அடைந்த சுபஸ்ரீ குறித்து தைரியமாக தெரிவித்த சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு தன்னுடைய ஆறுதலை தெரிவித்து கொண்ட விஜய், இது போன்ற சமூக பிரச்சனைக்கு தனது ரசிகர்கள் ஹேஷ்டாக் போட வேண்டும் என்றும் தேவையில்லாத விஷயத்தை ஹேஷ்டேக் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்ய வேண்டுமோ அவர்களை கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது செய்துள்ளதாகவும் அவர் காவல்துறை மற்றும் தமிழக அரசை சாடினார்.

தமிழ் திரையுலகில் உள்ள பெரிய நடிகர்கள் யாரும் சுபஸ்ரீ விஷயத்தில் அரசையும், காவல்துறையையும் விமர்சனம் செய்யாத நிலையில் விஜய் தனது கருத்தை தைரியமாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விஜய்யின் இந்த கருத்துக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை விஜய் மிக சரியாக பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.