கமல்ஹாசனை தூக்கி கையில் வைத்துள்ள சிவாஜி: நினைவு நாளில் பகிர்ந்த புகைப்படம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளான ஜூலை 21ஆம் தேதி மறைந்தார் என்பதும் அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே இரங்கல் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 20 ஆவது நினைவு தினம் இன்று திரை உலகினர் மத்தியில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. திரையுலகினர் பலர் அவரை அவரது நினைவைப் போற்றி புகழ்ந்து வருகின்றனர் என்பதும் அவருடன் நடித்த அனுபவத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் சிவாஜிகணேசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும், அதன்பின் தேவர் மகன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் சிவாஜி கணேசன் நினைவு நாள் குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

சிவாஜி கணேசன் நடித்த ’பார்த்தால் பசிதீரும்’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நிலையில் அந்தப் படத்தின் ஒரு காட்சியில் குழந்தையாக நடித்த கமல்ஹாசனை சிவாஜி கணேசன் கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை கமல்ஹாசன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த டுவிட்டில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது: திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்.

More News

கமல் கூறும் கட்டிப்பிடி வைத்தியம்....! இதில் உள்ள சுவாரஸ்யமான நன்மைகள் என்னென்ன...?

மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு  உணவும், உடற்பயிற்சியும் தேவையான ஒன்று. இதையும் தாண்டி மன நிம்மதி மற்றும் சந்தோஷத்திற்கு,

புதிய மீன்பிடி சட்ட வரைவை திரும்ப பெறவில்லையெனில் கடும் போராட்டம் நடக்கும்....! ஒன்றியஅரசுக்கு சீமான் எச்சரிக்கை....!

வாழையடி வாழையாக மீன் தொழில் செய்து வரும் நம் ஊரில் உள்ள மீனவர்களை, பன்னாட்டு நிறுவனங்களின்

அருள்நிதியின் அடுத்த பட டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அருள்நிதி தனக்கேற்ற கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்

நயன்தாராவின் அடுத்த படத்தின் ரிலீஸ் தகவல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில்  ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த திரைப்படமும்

ஆபாச பட விவகாரத்தில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பா? மும்பை போலீஸ் விளக்கம்

ஆபாச படம் எடுத்து செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்ட சம்பவம் பாலிவுட்டில்