close
Choose your channels

முப்படை தளபதி உள்பட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து: கமல்ஹாசன் இரங்கல்

Wednesday, December 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் இன்று காலை விபத்துக்குள்ளான நிலையில் அந்த விபத்தில் இறந்தவர்களுக்கு தனது அனுதாபங்கள் என உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11:45 குன்னூரில் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட மொத்தம் 14 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளதாகவும் அவர்களது உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இந்த விபத்து குறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.