close
Choose your channels

கொன்று பார், வென்று தீர்வேன்: குத்திக்கிழிக்கும் வீடியோ குறித்து கமல்

Wednesday, November 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'இந்து தீவிரவாதிகள் இனி இல்லை என்று சொல்ல முடியாது' என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர் கூறிய கருத்து உண்மைதானோ? என்று சந்தேகம்ப்படும் அளவிற்கு நேற்று ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் ஒரு சிறுவன் கமல்ஹாசனின் போஸ்டரை கத்தியால் குத்தி கிழிப்பதாக உள்ளது. பின்னணியில் ஒரு குரல் 'இவன் இந்து தீவிரவாதி, இவனை விடாதே' என்று ஒலிக்கின்றது.

இந்த வீடியோ குறித்து கமல் தனது டுவிட்டரில் கூறுகையில், '`என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல்.' 'என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ் இனம் சகியாது. இயற்கை எனைக் கொன்றே மகிழும். அதன்முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்' என்று பதிவு செய்துள்ளார்

இந்த டுவீட் புரியாதவர்களுக்கு இதோ ஒரு விளக்கவுரை: அங்கு வளர்ந்த மீனவ சகோதரர்கள் தமிழ் பேசியதற்காக சாகிறார்கள்..ஒரு குழந்தை குத்தி நான் சாவது மேல்தான்..ஒரு நாள் இயற்கையாக நான் சாகத்தான் போகிறேன்..அதற்குமுன் இந்த வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்வேன்..முடிந்தால் கொன்று பார்..நான் வென்றே தீர்வேன்

ஒரே டுவிட்டில் மத தீவிரவாதம் குறித்தும், மீனவர்கள் தமிழ் பேசியதால் தாக்கப்பட்டது குறித்தும் சுட்டிக்காட்ட கமல்ஹாசனால் மட்டுமே முடியும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.