close
Choose your channels

'ஹேராம்' படம் குறித்து வருத்தம் தெரிவித்த கமல்ஹாசன்!

Tuesday, February 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2000ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 18ஆம் தேதிதான் உலக நாயகன் கமல்ஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி, வசுந்தராராஜ், ஹேமாமாலினி உள்பட பலர் நடித்த ‘ஹே ராம்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வசூல் அளவிலும் விமர்சனங்கள் அளவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் வரும் ஒருசில காட்சிகள் இன்றைய காலத்திற்கும் பொருத்தமாக இருக்கும் வகையில் தீர்க்கதரிசனமாக கமல் படமாக்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய இந்த படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவு செய்ததை அடுத்து இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட்டை பதிவுசெய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஹே ராம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிந்துவிட்டன. சரியான நேரத்தில் நாங்கள் இந்த படத்தை உருவாக்கியதில் மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் சுட்டிக்காட்டிய அச்சங்களும் எச்சரிக்கைகளும் தற்போது நிஜமாகவே நிறைவேறிக்கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த சவால்களை நாட்டின் நல்லிணக்கத்தின் மூலம் தான் நாம் சமாளிக்க வேண்டும். நாளை நமதே! என்று குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.