A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லையா? கமல்ஹாசன்

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியான நிலையில் முதல் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்ட கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி என்பவர் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் கௌசல்யாவின் தாயார் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல்துறையினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் கௌசல்யாவின் தாய், தந்தை இருவருமே விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை ஐகோர்ட்டில் இன்று வெளியான இந்த தீர்ப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலர் இந்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், ஒருசிலர் அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு இந்த வழக்கை சரியாக நடத்தவில்லை என்றும் இந்த வழக்கின் தீர்ப்பு ஏற்புடையது இல்லை என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இயக்குனர் பா ரஞ்சித் உள்பட ஒருசிலர் இந்த தீர்ப்பு குறித்து தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று வெளியான இந்த தீர்ப்பு குறித்து உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?

More News

தமிழக கொரோனா பாதிப்பில் மீண்டும் புதிய உச்சம்:பிற மாவட்டங்களிலும் பரவுவதால் பதட்டம்

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டியது என்பதும் குறிப்பாக நேற்று 2500ஐ தாண்டியது என்றும் வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

சீன எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு துணை கலெக்டர் பதவி: முதல்வர் அசத்தல்

சமீபத்தில் இந்திய எல்லையில் சீன ராணுவ வீரர்கள் திடீரென அத்துமீறி ஊடுருவி வந்ததால் அவர்களை தடுக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

இவரைத்தான் திருமணம் செய்ய போகிறேன். கணவருக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் ஆர்த்தி

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகைகளில் ஒருவரான ஆர்த்தி, கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் கணேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

உலகின் 10 பணக்காரர் பட்டியலில் இணைந்த இந்தியர்: குவியும் வாழ்த்துக்கள்

உலக பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முகேஷ் அம்பானி முதல் பத்து இடங்களுக்குள் இணைந்துள்ளது இந்தியாவிற்கே பெருமை தரக்கூடியதாக கருதப்படுகிறது

ரெஸ்ட்லிங் ஹீரோ அண்டர்டேக்கர் அதிரடி முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி

WWE எனப்படும் ரெஸ்ட்லிங் போட்டிகளில் ஹீரோவாக திகழ்ந்த அண்டர்டேக்கர் எடுத்துள்ள அதிரடி முடிவால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.