close
Choose your channels

நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் ஒருவர்: கமல்ஹாசன்

Sunday, September 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்று புகழக்கூடிய பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் பிறந்த நாளை இன்று திரையுலகம் கொண்டாடி வருகிறது

எம்ஜிஆர்-சிவாஜி கணேசன், ரஜினி-கமல், அஜீத்-விஜய் என மூன்று தலைமுறை நாயகர்களுடன் நடித்த நாகேஷ் அவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல்வேறு சாதனைகள் செய்துள்ளார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், குணசித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது

அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் 27-ம் தேதியான இன்று திரையுலகினர் கொண்டாடி வருகின்றனர் இந்த நிலையில் நாகேஷ் உடன் மிகவும் நெருக்கமான நட்பை கொண்டவரும் நாகேஷை தனது மானசீக குருவாக நினைத்து வருபவருமான கமல்ஹாசன் அவர்கள் நாகேஷ் குறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:

நாகேஷ் அய்யா... உம்மை நினைக்காத நாட்கள் மிகச்சிலவே. பல தலைமுறைகளை மகிழ்வித்த வித்தகர். அந்த ரசிகர் கூட்டத்தில் நானும் உட்படுவேன். நண்பனாய் மாறுவேடம் பூண்டு வந்த என் குருக்களில் அவரும் ஒருவர். என் கலை மரபணுவில் அவரும் வாழ்கிறார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.