close
Choose your channels

'விக்ரம்' படத்தின் கதை இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Monday, May 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் வரும் 3ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 

இந்த நிலையில் இந்த படத்தை திரையிடும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கு நிறுவனம் இந்த படத்தின் ஒன்லைன் கதையை தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .

அதன்படி ’விக்ரம்’ படத்தின் ஒன்லைன் கதை என்பது ’கடத்தப்பட்ட அரசு அதிகாரி ஒருவரை மீட்க, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி எடுக்கும் நடவடிக்கை தான்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக கமல்ஹாசன் நடித்து உள்ளார் என்பது தெரிந்ததே. கடத்தப்பட்ட அரசு அதிகாரியாக பகத் பாசில் நடித்திருப்பார் என்றும், அரசு அதிகாரியை கடத்திய வில்லனாக விஜய் சேதுபதி நடித்து இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.