அனிருத் இசையில் முதல்முறையாக பாடிய கமல்ஹாசன்: வைரல் புகைப்படங்கள்!

உலகநாயகன் கமலஹாசன் ஏற்கனவே பல பாடல்கள் எழுதி பாடியுள்ள நிலையில் முதல் முறையாக அனிருத் இசையில் ஒரு பாடலை எழுதி பாடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’விக்ரம்’ படத்தின் சிங்கிள் பாடல் மே 11ஆம் தேதி வெளியாகும் என்று அனிருத் அறிவித்து உள்ளார். மேலும் இந்த பாடலில் உள்ள ஸ்பெஷல் என்னவென்றால் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களே இந்த பாடலை எழுதியுள்ளார் என்றும் இந்த பாடலை அவரே பாடி உள்ளார் என்றும் இந்த பாடலை பதிவு செய்யும் போது தனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்றும் அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அனிருத் தெரிவித்துள்ளார் .

’பத்தல பத்தல’ என்று தொடங்கும் இந்த பாடல் இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

உறவினருடன் செல்பி எடுத்த மனைவி: ஆத்திரத்தில் கணவன் செய்த விபரீத செயல்!

 உறவினருடன் செல்பி எடுத்த மனைவி மீது கோபம் கொண்டு கணவன் செய்த விபரீத செயலால் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு 12 லட்சத்தில் வீடு கட்டு கொடுத்த பிரபல தொழிலதிபர்!

 கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு பிரபல தொழிலதிபர் 12 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார் .

பிறந்த நாளில் சாய்பல்லவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கமல்ஹாசன்!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 51வது தயாரிப்பு திரைப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்பதும் சிவகார்த்திகேயனின் 21வது படமாக

விக்னேஷ் சிவன் - நயன் தாரா திருமணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான நபர்: வருத்தத்துடன் பேட்டி!

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணத்தால் மன உளைச்சலுக்கு ஆளானதாக விக்னேஷ் சிவனின் உறவினர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வெற்றிமாறனின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட தனுஷ்!

வெற்றிமாறனின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டுள்ளார்.