ஆத்திகராக மாறிய நாத்திகர் கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,April 12 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் நாத்திக கொள்கையுடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய படங்களிலும் நாத்திக கருத்துக்கள் மெல்லியதாக ஊடுருவி இருக்கும்.

இந்நிலையில் ஆத்திகத்தின் பெருமையை உலகிற்கே உணர்த்திய சுவாமி விவேகானந்தரின் கெட்டப்பில் கமல்ஹாசன் ஒரு படத்தில் நடித்துள்ளார். சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் தயாரிப்பில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் விவேகானந்தர் கெட்டப்பில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 'ஆண்டவன் கட்டளை' என்ற படத்தில் விவேகானந்தர் வேடம் ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயராம் மகன் காளிதாஸ், ஆஷ்னா சாவேரி, ஊர்வசி, பூஜா குமார், சந்தானபாரதி, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கி வருகிறார்.

More News

அதர்வா போதைக்கு காரணமான இரு நாயகிகள்

அதர்வாவின் சொந்த நிறுவனமான 'கிக் ஆஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமான 'செம போதை ஆகாதே'.....

ஒரே நாளில் 260 காட்சிகள். சென்னையில் தெறிக்க வைக்கும் 'தெறி'

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை மறுநாள் முதல் உலகமெங்கும் தெறிக்கவுள்ள நிலையில்...

விஜய்யின் 61-வது, 62-வது படங்களை இயக்குபவர்கள் யார்?

இளையதளபதி விஜய் நடித்த 59வது படமான 'தெறி' நாளை மறுநாள் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. மேலும் அவருடைய 60வது படத்தின்...

இளையதளபதி விஜய்யின் 'தெறி'. ஒரு முன்னோட்டம்

இளையதளபதி விஜய்யின் தெறி திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் விஜய் ரசிகர்களிடையே பரபரப்பு அதிகரித்து...

தெறி ஸ்டண்ட் காட்சிகளுக்காக விஜய் எடுத்த ரிஸ்க். திலீப் சுப்பராயன்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது...