close
Choose your channels

வருக வருக புது யுகம் படைக்க: முதல் மாநாட்டுக்கு டுவிட்டரில் அழைப்பு விடுத்த கமல்

Tuesday, February 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நாளை முதல் தனது அரசியல் பயணத்தை அதிகாரபூர்வமாக தொடங்கவுள்ளார். மதுரையில் நாளை கட்சியின் பெயரையும் கொள்கையையும் அறிவித்துவிட்டு தனது கட்சியின் கொடியையும் அவர் ஏற்றவுள்ளார். கமல்ஹாசனின் கட்சியின் கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதை அறிய அனைவரும் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தனது முதல் அரசியல் கூட்டத்திற்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என்று தனது டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார். அவர் அதில் கூறியதாவது: நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கமல்ஹாசனை சந்தித்து வரும் நிலையில் நாளைய முதல் பொதுக்கூட்டத்திலும் பல விஐபிக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.