கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட தயாரிப்பாளர்: மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததால் மரணம்!

  • IndiaGlitz, [Sunday,June 07 2020]

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசன் பட தயாரிப்பாளர் ஒருவர் மருத்துவமனையில் இடமில்லை என அனுமதி மறுக்கப்பட்டதால் மரணமடைந்த சோகமான சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடித்த இந்தி படமான ‘ராஜ்திலக்’ உள்பட ஒருசில படங்களை தயாரித்தவர் பாலிவுட் தயாரிப்பாளர் அனில்சூரி. இவருக்கு கடந்த 2ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள முக்கிய இரண்டு மருத்துவமனையில் அனுமதிக்க அவரது குடும்பத்தினர் முயற்சித்தனர்.

ஆனால் அந்த மருத்துவமனைகளில் இடமில்லை என அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து அவருடைய உடல்நிலை மேலும் மோசமாகவே அதன்பின்னர் வேறொரு மருத்துவமனையில் அனில்சூரி அனுமதிக்கப்பட்டதாகவும் ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வியாழன் அன்று அவர் இறந்து விட்டதாகவும் அனில்சூரியின் சகோதரர் ராஜீவ் சூரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அனில்சூரியின் இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும் அதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மட்டுமே பாதுகாப்புடன் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 77 வயதாகும் அனில்சூரிக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இரவு முழுவதும் பப்ஜி விளையாட்டு: அதிகாலையில் தூக்கில் தொங்கிய 14 வயது சிறுவன்

இரவு முழுவதும் பப்ஜி விளையாட்டை விளையாடிய 14 வயது சிறுவன் அதிகாலை 3 மணிக்கு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இந்தியாவிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கும்: பீதியை கிளப்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!!!

அமெரிக்காவில் 20 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு இருக்கிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக தெரிகிறது.

தமிழகத்தில் 2வது நாளாக 1400க்கும் மேல்: 30 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று 1400க்கும் மேற்பட்டவர்கள் அதாவது 1438 பேர் பாதிப்பு அடைந்ததால்

ஸ்பை கேமிரா மூலம் 1400 ஆபாச வீடியோக்கள்: பலே குற்றவாளி கைது

கடந்த பல ஆண்டுகளாக 1,400 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை ஸ்பை கேமராக்கள் மூலம் எடுத்த பலே குற்றவாளி ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் 

கர்ப்பிணி யானையை அடுத்து கர்ப்பிணி பசு: கோதுமை மாவில் வெடிகுண்டு வைத்ததால் பரபரப்பு 

கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்றுக்கு அன்னாசி பழத்தில் வெடிகுண்டு வைத்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள்