40 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் போட்ட பிள்ளையார் சுழி: இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்!

பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரித்த திரைப்படம் ஒன்று 40 ஆண்டுகள் கொண்டாட்டத்தை கொண்டாடி வரும் நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் நன்றி கூறியுள்ளார்.

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் ’மூன்றாம் பிறை’. கமல்ஹாசன் ஸ்ரீதேவி நடிப்பில், பாலுமகேந்திரா இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆனதை அடுத்து அதன் கொண்டாட்டத்தை கமல் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

வெறும் 33 லட்சத்தில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தின் பாடல்கள் இன்றும் காலத்தால் அழியாமல் உள்ளது என்பதும் கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி பாடலான ‘கண்ணே கலைமானே’ பாடல் இடம்பெற்ற படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்து ’மூன்றாம் பிறை’ படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எங்கள் சத்யஜோதி நிறுவனத்தின் முதல் படமான ’மூன்றாம் பிறை’ வெளிவந்து இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. படம் மாபெரும் வெற்றி அடைந்து மிகுந்த பாராட்டுகளையும் பல முக்கிய விருதுகளை அள்ளிக் குவித்தது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் இசை மற்றும் பின்னணி இசை. அந்த அளவிற்கு இப்படத்தின் பாடல்கள் சாதனை படைத்தது.

40 ஆண்டுகள் ஆகியும் இன்றும் இப்படத்தில் உள்ள பாடல்களின் தாக்கம் குறையவில்லை என்று தான் கூற வேண்டும். மேலும் எங்கள் நிறுவனத்தின் வெற்றி திரை பயணத்திற்கு தாங்கள் இட்ட இந்த பிள்ளையார் சுழியே காரணம். இதற்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

More News

'வலிமை' டிக்கெட்டிற்காக வெயிட்டிங்: ஷிவானி நாராயணன்

அஜித் நடித்த 'வலிமை' படத்தை பார்ப்பதற்காக டிக்கெட்டுக்காக வெயிட்டிங்கில் இருக்கிறேன் என ஷிவானி நாராயணன் தெரிவித்துள்ளார். 

சரத்குமாரின் 150வது படத்தின் கதை இதுதான்: செம த்ரில்லர் படமா?

சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர்களை அடுத்து 150வது படம் என்ற மைல்கல்லை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தொட்டிருக்கின்றார் என்பதும் அவர் நடிக்கும் 150வது திரைப்படத்தின்

சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கின்றாரா?

சூப்பர் ஸ்டார் நடிகர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பாடகர் கானா பாலாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் இவ்வளவா?

பாடகர் கானா பாலா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அவருக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை பார்த்து அந்த தொகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்

பிக்பாஸ் அல்டிமேட்: கமல்ஹாசனுக்கு பதில் இந்த பிரபல நடிகரா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது என்பதும் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் தற்போது வெளியேறி உள்ளனர்