இந்து தீவிரவாதி என நான் பேசியது சரித்திர உண்மை: கமல்ஹாசன்

சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்ததோடு, அவர் மீது வழக்குகளும் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்திருந்த கமல்ஹாசன் இன்று மீண்டும் திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது தான் கூறிய இந்து தீவிரவாத பேச்சு சரித்திர உண்மை என அவர் மீண்டும் தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் கமல்ஹாசன் பேசியதாவது: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன். தேர்தல் அரசியலில் சேர்ந்த பின், ஒரு இனம் மட்டும் போதுமா ? மக்கள் அனைவருக்குமே நீதி கிடைக்க வேண்டும் என பேசினார்.

மேலும் யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும். உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும் என்றும் கமல்ஹாசன் பேசினார்.

More News

கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம்: மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை 

தொடர்ச்சியாக இந்து விரோத பேச்சை கடைபிடித்து வரும் கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம் என மன்னார்குடி ஜீயர் கமல்ஹாசனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்முறையாக சேரன் படத்திற்கு கிடைத்த சான்றிதழ்?

இயக்குனர் சேரன் தான் இயக்கிய முதல் படமான 'பாரதி கண்ணம்மா' படம் முதல் சமீபத்தில் வெளியான 'திருமணம்' வரை அனைத்து படங்களும் சென்சாரில் 'யூ' சான்றிதழை பெற்றுள்ளதாகவும்,

பிக்பாஸ் 3: அட்டகாசமான அதிகாரபூர்வ அறிவிப்பு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும், இதற்கான புரமோ படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தது

'தல 60' படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்!

அஜித் நடித்து முடித்துள்ள 59வது திரைப்படமான 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 3 திரையுலக பிரபலங்கள்!

பிக்பாஸ் 1, பிக்பாஸ் 2 ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பெண்கள் சீரியலை கூட மறந்துவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தொடங்கினர்