கமல் அல்லது அஜித் முதல்வராக வேண்டும்: சுசீந்திரன்

  • IndiaGlitz, [Thursday,November 23 2017]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் கடந்த இரண்டு நாட்களாக கந்துவட்டி கொடுமையால் உயிரிழந்த அசோக்குமாரின் மரணம் குறித்து தனது கருத்துக்களை ஆவேசமாக தெரிவித்து வருகிறார். குறிப்பாக அஜித் உள்பட பலர் இந்த கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் தகவலை நேற்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சினிமாத்துறையினர்களின் நலன்காக்க சினிமாத்துறையை சேர்ந்த ஒருவரே தமிழக முதல்வராக வேண்டும் என்ற கருத்து தற்போது கோலிவுட் திரையுலகினர்களிடையே பரவி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் சுசீந்திரன், 'சினிமா துறையில் இருந்து அடுத்து யார் முதல்வராக வர தகுதியானவர்கள் என்ற கேள்விக்கு நான் அளித்த பதில் கமல் அல்லது அஜித் வந்தா நல்லா இருக்கும்' என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் ஏற்கனவே அரசியலில் குதித்துவிட்டதாக கூறி வருவதுடன் அரசியல் கட்சியை தொடங்கும் பணியிலும் உள்ளார். அதேபோல் அஜித்தும் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாக நேற்று ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி கூறியுள்ளார். சுசீந்திரனின் ஆசை எப்போது பலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது: கமல்ஹாசன்

சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் நேற்றுமுன் தினம் கந்துவட்டி கொடுமையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரையுலகினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

டுவிட்டர் முன்னேற்ற கழகம்: கமல் கட்சிக்கு பெயர் செலெக்ட் செய்த எச்.ராஜா

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், ஊழல்வாதிகளுக்கு எதிராகவும் தைரியமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமூக அக்கறையுடன் அவர் தெரிவித்து வரும் கருத்துக்கள்

அன்புச்செழியன் உத்தமர்: அவரை தவறாக சித்தரிக்க வேண்டாம்: பிரபல இயக்குனர்

அன்புச்செழியன் மிரட்டல் காரணமாக சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் இறந்ததாக கூறப்படும் நிலையில் கோலிவுட் திரையுலகினர் ஒட்டுமொத்தமாக திரண்டு அன்புச்செழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்

ரூ.20 லட்சம் கடனுக்காக ரூ.7 கோடி வீட்டை இழந்த பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம்

கந்துவட்டி கொடுமையால் நேற்று அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதும் அவரை போல இன்னும் பல திரையுலக பிரபலங்கள் கந்துவட்டி கொடுமையை அனுபவித்ததாக தெரிய வருகிறது

அசோக்குமாரிடம் எந்தவித பண வரவு-செலவும் இல்லை: கோபுரம் பிலிம்ஸ் விளக்கம்

சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் விளக்க அறிக்கையை கொடுத்துள்ளது.