close
Choose your channels

ரஜினி விவகாரம் குறித்து கமல் கட்சி பதிவு செய்த டுவீட்?

Wednesday, January 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த்-பெரியார் விவகாரம் கடந்த ஒரு வாரமாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது தெரிந்ததே. குறிப்பாக நேற்று ரஜினிகாந்த் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறியதிலிருந்து தமிழக அரசியல் களமே கொந்தளித்துள்ளது. ரஜினிக்கு எதிராக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரான கமலஹாசன் இந்த விஷயத்தில் இன்னும் அமைதியாக இருப்பதாக தெரிகிறது. ஒரு பக்கம் தான் பெரிதும் மதிக்கும் பெரியார், இன்னொரு பக்கம் தன்னுடைய உயிர் நண்பன் ரஜினிகாந்த் என்பதால் கமலஹாசன் அமைதியாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமலஹாசனின் மக்கள்நீதிமய்யம் கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள பக்கத்தை 'வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை' என்று கமலஹாசன் கூறிய ஒரு வசனத்தை புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளது. இந்த பதிவு மூலம் கமல்ஹாசன், ரஜினிக்கு மறைமுக ஆதரவு கொடுக்கின்றாரா? அல்லது ரஜினிக்கு எதிராக போராடும் பெரியார் ஆதரவாளர்களை அமைதியாக இருக்கும்படி கூறுகின்றாரா? என்று தெரியவில்லை என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர். மொத்தத்தில் வழக்கம்போல் கமல்ஹாசன் ஒரு புரியாத பதிவை பதிவு செய்திருப்பதாகவே கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.