'இந்தியர்' அடையாளம் போதும், இந்து அடையாளம் வேண்டாம்: கமல்ஹாசன்

தேர்தல் பிரச்சாரம் சற்றுமுன் முடிவடைந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 'இந்து மதம் என்ற அடையாளம் ஆங்கிலேயர் தந்தது, அது வேண்டாம் இந்தியர் என்ற அடையாளம் போதும்' என்று கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

சீப்பை ஒளித்துவைத்து கல்யாணத்தை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நினைக்கின்றன. மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. ஆழ்வார்களாலோ, நாயன்மார்களாலோ இந்து என்ற குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ 'இந்து' என நாமகரணம் செய்யப்பட்டோம்.

ஆண்டு அனுபவித்து சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்பொழுது மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாக கொள்வது எத்தகைய அறியாமை

நாம் இந்தியர் என்கின்ற அடையாளம் சமீபத்தியதுதான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக, அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.

புரியலன்ற சோமாரிகளுக்கு.... கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். கோடின்ன உடனே பணம் ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல. அரசியல்வாதிகல் அல்ல, வெறும் வியாதி! தமிழா நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

More News

ஆர்யாவுக்கு வாழ்த்து கூறிய சூர்யா!

சூர்யாவும் ஆர்யாவும் இணைந்து நடித்த 'காப்பான்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஆர்யாவின் படம் ஒன்றுக்கு சூர்யா இன்று தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனிருத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகிய அனிருத், முதல்முறையாக விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி ஆகியோர்களுடன் இணைந்து

2020க்கு தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்!

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இதனையடுத்து அவர் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம்,

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் மருத்துவர் பரிதாப பலி

இந்த தலைமுறையின் கலாச்சாரங்களில் ஒன்றாகிய செல்பியால் உயிரிழப்பு உள்பட பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஆந்திராவை சேர்ந்த பெண் மருத்துவர்

அனுமதி மறுத்தாலும் பரப்புரை தொடரும்! கமல்ஹாசன்

கமல்ஹாசன் இன்று சூலூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், அனுமதி மறுத்தாலும் எனது பரப்புரை தொடரும் என்று டுவிட்டரில்