close
Choose your channels

இன்னொரு செருப்புக்காக காத்திருக்கின்றேன்: கமல்ஹாசன்

Sunday, May 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள 'ஒத்த செருப்பு' இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது:

பார்த்திபன் உள்பட இந்த விழாவுக்கு வந்திருக்கும் பலர் தங்களுடைய முதல் படங்களில் என்னைத்தான் அணுகினார். பார்த்திபன் தனது 'புதிய பாதை' படத்தில் நடிக்க என்னை அணுகினார். நல்லவேளை எனக்கு அப்போது தேதி இல்லை. அதனால் அவரே நடித்து ஹீரோ ஆனார். இதில் எனக்கு மிகவும் சந்தோஷம்.

எனக்கு இங்கே காந்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை கொடுத்தார்கள். அதில் உள்ள ஒருசம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. காந்தியடிகள் ரயிலில் ஏறும்போது அவருடைய காலில் உள்ள ஒரு செருப்பு கீழே விழுந்துவிட்டது. உடனே காந்தி தன்னுடைய இன்னொரு காலில் உள்ள செருப்பையும் தூக்கி கீழே போட்டுவிட்டார். ஒத்த செருப்பு யாருக்கும் பயன்படாது. அதனால் இன்னொரு செருப்பை போட்டதாக காந்தி கூறினார். அப்படித்தான் நானும் இன்னொரு செருப்புக்காக காத்திருக்கின்றேன். செருப்பு விழுந்ததால் நாம் அவமானப்பட வேண்டிய அவசியம் இல்லை. செருப்பை வீசியவர்தான் அவமானப்பட வேண்டும்.

ஒத்த செருப்பு படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. நிச்சயம் விரைவில் பார்ப்போம்' என்று கமல் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.