close
Choose your channels

தீபிகாவின் தலை காக்கப்பட வேண்டும்: கமல்ஹாசன்

Tuesday, November 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'பத்மாவதி' திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதால் வரும் டிசம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவேண்டிய இந்த படம் தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தீபிகா படுகோனே மற்றும் இயக்குனரின் தலைக்கு தலா ரூ.5 கோடி விலை வைத்து ஒருசில அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த அறிவிப்புக்கு உலக நாயகன் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

பத்மாவதி’ பிரச்சனையில் நடிகை தீபிகாவை பாதுகாக்க வேண்டும்.  இதேபோல் என்னுடைய படங்களுக்கும் பிரச்சனைகள் எழுந்தன. உடலுக்கு தலை முக்கியம். இங்கு தீபிகாவின் தலை காப்பாற்றப்பட வேண்டும். அதை விட அவருக்கான சுதந்திரத்தை காக்க வேண்டும்.  இது சிந்திக்க வேண்டிய நேரம். நிறைய சொல்லியாகி விட்டது. கேட்டுக் கொள் பாரத மாதாவே! என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.