பாஜக ஆதரவாளராக மாறி வருகிறாரா கமல்ஹாசன்?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ‘உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்’ என்று பதிவு செய்திருந்தார்.

மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கமல்ஹாசன் இதுகுறித்து விரிவான கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ’ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்பட இலவசமாக வழங்கும் பல்வேறு அதிரடி சலுகைகளை அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஏழைகள் நிலைமையை புரிந்து கொண்டதற்கு நன்றி. அடித்தட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்ற எனது அச்சம் தான் நான் பிரதமருக்கு கடிதம் எழுத காரணம். இந்த நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் செயல்பட்ட பிரதமருக்கும் நிதியமைச்சருக்கும் எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே பாஜகவையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் தற்போது மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்திருப்பது அவர் தனது நிலையை மாற்றிக்கொண்டாரா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் விமர்சனம் செய்யும் நேரத்தில் விமர்சனமும், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவதும் தான் ஒரு உண்மையான அரசியல்வாதிக்கு அழகு என்பதை கமல் நிரூபித்துள்ளார்.

More News

வீட்டில் உள்ள செல்லப்பிராணிகள் கொரோனா வைரஸை பரப்புகிறதா???

செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்களிடம் இருந்து கொரோனா பரவுகிறது என்ற வதந்தியால் சீனாவில் பலர் தங்களது செல்லப் பிராணிகளைத் கைவிட்டு விடுகின்றனர்.

தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா நோயாளி: இம்முறை சிக்கியது திருச்சி

தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசால் எடுக்கப்பட்டாலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.

இனிமேல் தான் பூகம்பம் வெடிக்கும்: டாக்டர் கமலா செல்வராஜ் எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை வெறும் டெம்ப்ரேச்சர் மட்டும் செக் செய்துவிட்டு இந்தியர்கள் என்ற எண்ணத்தில் உள்ளெ விட்டுவிட்டோம், இனிமேல் தான் பூகம்பம் வெடிக்கும்,

உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? த்ரிஷா, நயன்தாரா பட நடிகை ஆவேசம்

கொரோனா வெளியே தீவிரமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் ஏன் நீங்கள் வெளியே போகிறீர்கள் என்றும், நீங்கள் வெளியே போனால் கொரோனா உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும்...

3 மாதத்திற்கு 5 கிலோ அரிசி இலவசம்: மற்றும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன் 

இன்று நாட்டு மக்களிடையே பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அவை பின்வருவன்: