close
Choose your channels

ஜோதி ஸ்ரீதுர்காவின் மரணமே இறுதி மரணமாக இருக்க செய்யப்போவது என்ன? கமலஹாசன்

Saturday, September 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீட்தேர்வு அச்சம் காரணமாக ஏற்கனவே கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ, அரியலூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று காலை மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா திடீரென தற்கொலை செய்து கொண்டார்

இந்த தற்கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தற்கொலைக்கு எதிராகவும் நீட்தேர்வுக்கு எதிராகவும் தமிழகத்தில் குரல்கள் ஒலித்து வருகின்றன. இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்த நிலையில் தற்போது மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா மரணம் குறித்தும் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!

கமல்ஹாசனின் இந்த டுவீட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.