மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது, ஆனால்... கமல்ஹாசன் டுவீட்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை என்ற அம்சத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை மட்டுமே கடைபிடித்து வரும் நிலையில் மும்மொழிக் கொள்கையை கடைபிடிக்க கூடாது என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதனையடுத்து இன்று காலை அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்றும் மும்மொழி கொள்கை கடைப்பிடிக்கப்படாது என்றும் உறுதியளித்தார். இதனை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சியினர் பலர் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் மும்மொழிக் கொள்கைக்கு முதல்வர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததற்கு உலகநாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டுவிட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மும்மொழிக் கொள்கைக்கு முதல்வரின் எதிர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே நேரம் National Assessment Centre, PARAKH, National Testing Agency, National Curricular Framework போன்ற அமைப்புகள் கல்வியில் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதை எதிர்ப்பதும் அவசியம்’ என்று தெரிவித்துள்ளார்.
 

More News

கொரோனாவால் உயிரிழந்த நர்ஸ் உடலை புதைக்க எதிர்ப்பு: 2 மணி நேரமாக தவிக்கும் உறவினர்கள்

அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நர்ஸ் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உறவினர்கள் இரண்டு மணி நேரமாக

ஒரே நாளில் 2 எம்பிக்கள், ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: தமிழகத்தில் பரபரப்பு

தமிழகத்தில் ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் இளம் ஹீரோவுக்கு பெண் குழந்தை: வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் ஒருவரான நகுல் சமீபத்தில் தனது பிறந்த நாளன்று தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். விரைவில் தனது குடும்பத்தில் புது வரவை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும்

ஐபிஎல் டி20 போட்டிக்களில் நேரத்தை மாற்றி புது அறிவிப்பு!!!

ஐபிஎல் டி20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்டிஸில் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை!!! பாதிப்பு யார் யாருக்கு???

நாளை (ஆகஸ்ட் 4) வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது.