close
Choose your channels

தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: 'மருதநாயகம்' பாடல் குறித்து கமல்

Saturday, April 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று முன் தினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடந்தாலும் பொன்பரப்பி போன்ற ஒருசில இடங்களில் மட்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. குறிப்பாக பொன்பரப்பி கிராமத்தில் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட ஜாதி - தேர்தல் மோதல் இன்னும் தமிழகத்தில் ஜாதி வெறி அடங்கவில்லை என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.

இந்த நிலையில் பொன்பரப்பி கலவரம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'மருதநாயகம்' படத்திற்காக, என் மூத்த அண்ணன் திரு.இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் ”பொன்பரப்பி” சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்' என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்ட பாடல் இதுதான்:

மதங்கொண்டு வந்தது சாதி
இன்றும்
மனிதனைத் துரத்துது மனு
சொன்ன நீதி.
சித்தம் கலங்குது சாமி - இங்கு
ரத்தவெறி கொண்டு ஆடுது பூமி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.