நீதிமன்றம் ஏன் எம்.எல்.ஏக்களை எச்சரிக்கவில்லை. கமல்ஹாசன் கேள்வி

  • IndiaGlitz, [Friday,September 15 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் மனதில் தோன்றும் கருத்துக்களை தைரியமாக தெரிவிப்பவர் என்பதும் முதல்வர் உள்பட அனைவரையும் விமர்சித்து வருகிறார் என்பதும் அவரது டுவிட்டரை ஃபாலோ செய்து வரும் அனைவருக்கும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து நீதிமன்றம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் நீதிமன்றத்தின் இந்த எச்சரிக்கை குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் குறித்து எச்சரிக்கை விடுத்த மதிப்புக்குரிய நீதிமன்றம், கடந்த சில நாட்களாக தங்களது பணியை செய்யாமல் இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், மக்களுக்கு சேவை செய்யாமல் சொகுசு விடுதியில் வாரக்கணக்கில் தங்கியிருப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் கமல்ஹாசன் இந்த வேண்டுகோளை நீதிமன்றத்தின் முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.