close
Choose your channels

கமல் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கொரோனா: ஆறுதல் கூறி கடிதம்

Sunday, March 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வேகமாக கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஒருவருக்கும் அவருடைய சகோதரருக்கும் நோய் வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தனது கட்சியின் மாவட்ட செயலாளருக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்த கமலஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் ஒரு கடிதத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

என் மாவட்டச் செயலாளருக்கும், அவரின் இணைபிரியா சகோதரருக்கும்,
இது ஒரு நோய், நரகமல்ல! இதை வெல்வது உறுதி.
போலி அரசியல் பூசாரிகள், போக்கிடம் இல்லாமல் திரிவர். அவர் கூற்றுக்கு இரையாகாதீர்.
காலி இடம் நிரப்பவல்ல நாம்.
நாம் புத்துயிர்! புதிய உலகம்!
ஆதலால் நாளை நமதே.

இவ்வாறு கமல்ஹாசன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.