அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுகிறார் கமலா ஹாரிஸ்..!

  • IndiaGlitz, [Wednesday,December 04 2019]

அமெரிக்க அதிபர் பதவி தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளி செனட் சபை உறுப்பினரான கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி வேட்பாளராகத் தற்போதையை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் களமிறங்குகிறார். இவரை, எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் உட்பட 17 பேர் களத்தில் இருந்தனர். இதற்கிடையே, பெரும் கோடீஸ்வரரும் நியூயார்க் நகர முன்னாள் மேயருமான மைக்கேல் ப்ளூம்பெர்க்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

அமெரிக்காவின் மற்றொரு பெரும் பணக்காரரான டாம் ஸ்டேயரும் அதிபர் தேர்தலில் குதித்துள்ளார். இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ், அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 'நான் பில்லியனர் இல்லை என்பதால் போட்டியிலிருந்து விலகுகிறேன்' என்று கமலா ஹாரீஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வேட்பாளராக வேண்டுமென்றால், முதலில் கட்சிக்குள் ஆதரவு கிடைக்க வேண்டும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இதற்காக, பிரசாரம் செய்யவும் பெரும் தொகை வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தலில் டி.வி விவாதங்கள், விளம்பரங்கள் அதிக முக்கியத்துவம் வகிக்கும். விளம்பரங்களுக்குச் செலவழிக்கவும் அதிக பணம் தேவை. தங்கள் பிரசாரத்துக்காக மக்களிடமிருந்து வேட்பாளர்கள் நன்கொடை பெறலாம்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட கமலா ஹாரீஸும் களத்தில் இருந்தார்.இந்நிலையில்,தன்னுடைய ட்விட்டர் தளத்தில் தமது ஆதரவாளர்களுக்கு கமலா ஹாரீஸ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், போட்டியிலிருந்து விலகுவதாகவும், பிரசாரத்தை நிறுத்திக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்துக்கான நிதியை திரட்ட முடியாதது, பிரச்சாரத்தில் பின்தங்கியதே கமலா ஹாரீஸின் இந்த முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

 

 

More News

தோழியின் கணவருடன் கள்ளக்காதல்: சென்னையில் நடந்த விபரீதம்!

சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியின் கணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது

குழந்தைகள் சாப்பிடும் உணவில் இறந்து கிடந்த எலி..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாஃபர்நகர் அரசு பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திருமணமான 20 நாளில் பெண் சாப்ட்வேர் எஞ்சினியர் கொலை:: கணவரே கொலை செய்தாரா?

பெற்றோரை எதிர்த்து காதலித்த இளைஞனை திருமணம் செய்துகொண்ட இளம்பெண் ஒருவர் திருமணமான இருபதாவது நாளில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

'தர்பார்' படத்தின் சூப்பர் அப்டேட்: ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஐ.ஐ.டி கேரள மாணவி செல்போனில் இருந்த தகவல்கள் உண்மை. மரண வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளலாம், தடவியல் துறை தகவல்

சென்னை ஐ.ஐ.டியில் பாத்திமா லத்தீப் என்னும் மாணவி எம்.ஏ முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கேரளா மாநிலம் கொல்லம் கிளிகொள்ளுர் கிராமத்தைச் சேர்ந்தவர்.