தனிமைப்படுத்தப்பட்டதாக ஒட்டப்பட்ட நோட்டீஸ் குறித்து கமல்ஹாசன் விளக்கம்

தமிழகத்தில் பரவலாக கொரோனா வைரஸ் எதிர்பார்த்ததைவிட நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது வீடுகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது 

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அவரது எல்டாம்ஸ் சாலை வீட்டின் முன் நோட்டீஸ் ஒன்றை ஒட்டி உள்ளது. இந்த நோட்டீஸில் ’மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 வரை கொரோனாவில் இருந்து எங்களையும் சென்னையையும் காக்க நாங்கள் தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கமலஹாசனுக்கு கொரோனா நோய் தொற்று பரவியதாக வதந்தி கிளம்பியது. இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் தனிமை என தவறான தகவல் பரவுகிறது. இது அந்த மாதிரி ஸ்டிக்கர் அல்ல. நாங்களே பாதுகாப்பாக இருக்கிறோம். மற்றவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என்று மாநகராட்சி ஒட்டும் ஸ்டிக்கர்.. எனவே வதந்திகள் பரப்பாதீர்கள்’ என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது

இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி கமல் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது 

More News

கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்ட சென்னை வாலிபர்: ஒரு மகிழ்ச்சியான செய்தி 

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், ஒரு ஆறுதல் செய்தியாக

கேலிக்கூத்தாகிய ஊரடங்கு உத்தரவு: மூன்றாவது நிலைக்கு சென்றுவிட்ட இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவின் இரண்டாவது நிலையில் இருந்த போதே சுதாரித்த இந்திய அரசும் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும் உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின.

கன்னியாகுமரியில் மேலும் ஒரு உயிரிழப்பு: கொரோனா காரணமா?

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திடீரென உயிரிழந்தார். ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை

தாயின் மரணத்திற்கு கூட செல்லாமல் துப்புரவு பணியை தொடர்ந்த அதிகாரி

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் போன்றவர்களின்

கொரோனா வைரஸை விட கொடியது: ஐடி ஊழியரின் அட்டூழியம்

உலகமெங்கும் மிக மோசமாக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கின்றனர்.