பாரதியின் புரட்சி விதை இனியேனும் விதி செய்யுமா? கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,September 12 2017]

மகாகவி பாரதியாரின் 96வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் பாரதியாரின் தீவிர ரசிகரான உலக நாயகன் கமல், பாரதியை குறிப்பிட்டு தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

'பாரதி போய் 96 ஆண்டுகளாயிற்று.கவிதையையே பொதுவுடமையாக்கி கல்லாத் தமிழர்க்கும் செவிவழி விதை தூவிய அந்த விவசாயி வம்சம், இனியேனும் விதி செய்யுமா?' என்பதுதான் அவரது டுவீட்

பாரதியார் மரணம் அடைந்து 96 ஆண்டுகள் ஆயிற்று. அவர் எழுதிய கவிதைகள் பொதுவுடைமை ஆக்கப்பட்டு கல்வி கற்காதவர்களுக்கும் அவரது பாடல்கள் செவி வழியில் கிடைக்கும் வகையில் செய்து புரட்சி விதையும் தூவப்பட்டுவிட்டது. இனி புதியதொரு விதி செய்வதே பாக்கி' என்று கமல் கூறியுள்ளார்.

கமல் கூறும் சமீபத்திய கருத்துக்களில் இருந்து அவர் நேரடி அரசியலில் ஈடுபட அதிக நாட்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பெரும்பாலோர் தங்களுடைய வாழும் பாரதியும், கவிதையும்  கமல்தான் தான் என்றும் அதனால்  அவர் ஒரு புதிய விதியை உருவாக்கினால் அதை பின்பற்ற தயாராக இருப்பதாகவும் பதிலளித்துள்ளனர்.
 

More News

விவேக்கை உணர்ச்சிவசப்பட செய்த விஜய்யின் அக்கறை

கடந்த சில நாட்களாக அனிதாவின் மரணம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்த நிலையில் இன்று காலை முதல் லேசாக அந்த செய்தி மங்கியது போல் தெரிந்தது.

'விவேகம்' படத்தின் 15 நாள் வெற்றி வசூல் விபரங்கள்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்திற்கு ரிலீஸ் தேதியில் இருந்தே நாலாபக்கத்திலும் இருந்து நெகட்டிவ் ரிசல்ட்டுக்கள் குவிந்தன.

ஜிமிக்கி கம்மல் டான்ஸ் ஷெரிலுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா?

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய், ஓவியா டிரெண்டுகளுக்கு இணையாக டிரெண்ட் ஆன ஒரு விஷயம் ஜிம்மி கம்மல் வீடியோ.

சூர்யா- ஜோதிகா: ஜில்லுன்னு ஒரு காதல்

கோலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளுக்கு பஞ்சமில்லை.

'கதாநாயகன்', 'நெருப்புடா' ஓப்பனிங் வசூல் விபரம்

விஷ்ணுவின் 'கதாநாயகன்' மற்றும் விக்ரம் பிரபுவின் 'நெருப்புடா' ஆகிய இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.