பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமூகத்துக்கு கூறுவது என்ன? கமல் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,July 13 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீரழிவை ஏற்படுத்துவதாக புகார் வந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி சமூகத்திற்கு எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பதை இந்த நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல் தனது பேட்டியில் கூறியதாவது:

அடுத்தவர் வீட்டில் நடக்கும் ஒரு சம்பத்தை வைத்துதான் ஒரு அறிவுரையை கூற முடியும். உதாரணமாக அடுத்த வீட்ல புருஷன் பொண்டாட்டியப் அடிக்கறதப்பார்த்தா இந்த மாதிரி எல்லாம் செய்ய கூடாது என்று நம் வீட்டு பிள்ளைகளுக்கு கற்று கொடுப்பார்கள்' என்று கூறினார்.

மேலும் கூடி வாழ்தலால் உளவியல் மாற்றங்கள் நிகழும். கே.பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்கள் 'பணமா பாசமா, பூவா தலையா, எதிர்நீச்சல் போன்ற படங்களில் கூட்டுக்குடும்பத்தில், ஒரே வாழிடத்தில் நடக்கும் சச்சரவுகளைப் பற்றிப் பேசினார்கள். அந்த படங்களில் பாலசந்தர் ஒருவரே திரைக்கதை வசனம் எழுதினார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் அவரவர் வசனங்களை எழுதி கொள்கிறார்கள் அதுதான் வித்தியாசம்' என்று கூறினார் .

More News

கண்ட மாடுகள் எல்லாம் ஆராய்ச்சி மணியை அடிக்க கூடாது. கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதால் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், கமல் உள்பட அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி புகார் அளித்தது என்பதை நேற்று பார்த்தோம்....

காயத்ரியின் சர்ச்சை 'வார்த்தை' குறித்து கமல் கூறியது என்ன?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளரும், தலைவியுமான காயத்ரி ரகுராம் நேற்று சர்ச்சைக்குரிய ஜாதியை குறிக்கும் ஒரு வார்த்தையை பயன்படுத்தினார்...

'விவேகம்' படத்தின் 3வது பாடல் குறித்து அனிருத்

தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே வெளியான இந்த படத்தின் 'சர்வைவா மற்றும் 'தலை விடுதலை' பாடல்கள் இணையதளங்களில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில்...

நடிகை கடத்தல் வழக்கில் திலீப் சிக்கியது எப்படி? திக் திக் நிமிடங்கள்

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகர் திலீப், தனது சொந்த பகையை மனதில் வைத்து பிரபல நடிகை ஒருவரை கூலிப்படைகள் வைத்து பழிவாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவால் சரவணா செல்வரத்னம் கடைக்கு சீல் வைப்பு

நெல்லையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் புதியதாக திறக்கப்பட்ட சரவணா செல்வரத்னம் ஸ்டோர் பல்வேறு விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள புகாரை அடுத்து அதன் தரைத்தளத்தை உடனடியாக மூடி சீல் வைக்கும்படி மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.